உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்தி வெட்டு

Published On 2022-11-21 06:43 GMT   |   Update On 2022-11-21 06:43 GMT
  • கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
  • விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் அருகே உள்ள டீ தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் சக்திவேல் (வயது 54). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தே.மு.தி.க. மனம்பூண்டி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன் (48) என்பவர் சக்திவேலை மடக்கி பிடிக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் ஆத்திரமடைந்த சக்திவேல், வெங்கடேசனை கத்தியால் தலையில் வெட்டி இருக்கிறார். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

உடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு பொதுமக்கள் துணையுடன் சக்திவேலை மடக்கி பிடித்தார். அப்போது பிரபுவுக்கும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. ஒரு வழியாக மடக்கி பிடிக்கப்பட்ட சக்திவேலிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். பின்னர் அரக ண்டநல்லூர் போலீசில் சக்திவேல் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News