திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் தீபாவளி வழிபாடு
- ஐயா றப்பர் சுவாமிக்கும் அறம்வ ளர்த்தநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
- புத்தாடை மற்றும் பல்வேறு இனிப்புகளை வைத்து தீப ஆராதனை செய்யப்பட்டது.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நேற்று ஐயாறப்பர் சுவாமிக்கும் அறம்வ ளர்த்தநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து, லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, முறுக்கு மற்றும் அதிரசம் ஆகிய பலகாரங்களை நிவேதனமாக சமர்ப்பித்து, தீப ஆராதனைகள் செய்ய ப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் மற்றும் சுயசாம்பிகை அம்மன் தம்பதியருக்கும், தெட்சணாமூர்த்தி, வினா யகர், சுப்பிரமணியர்சுவாமி, துர்கை, லெட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியருக்கும், சண்டிகேஸ்வரர், அகப்பே ய்ச்சித்தர் மற்றும் 63 நாயன்மா ர்களுக்கும் அபிஷேகம் செய்து புத்தாடைகள் அணிவித்து ஆராதனைகள் செய்யப்பட்டது.
மேலும், சன்னதி முன்னால் சுவாமிகளின் சார்பில் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடி வழிபாடு செய்யப்பட்டது. இவ்வழிபாட்டில் கோயில் சிவாச்சாரியார்கள், நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமியின் அருள்பெற்றார்கள்.
இத ற்கான ஏற்பாடுகளை ஐயாற ப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திரந்தார்கள்.