உள்ளூர் செய்திகள்

 கடத்தூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை மதியன்பன் வழங்கினார்.

கடத்தூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

Published On 2023-05-31 10:14 GMT   |   Update On 2023-05-31 10:14 GMT
  • இந்த போட்டி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
  • முதல் பரிசாக ரூ.20 ஆயிரத்தை கடத்தூர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், இரண்டாம் பரிசான ரூ. 15 ஆயிரத்தை ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும் பெற்றனர்.

பாப்பிரெட்டிபட்டி, 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஆர்சிசி கிரிக்கெட் கிளப் சார்பாக முதலாம் ஆண்டு ரகுநாத் நினைவுக்கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது.

இந்த போட்டி 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரத்தை கடத்தூர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், இரண்டாம் பரிசான ரூ. 15 ஆயிரத்தை ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணியும், மூன்றாம் பரிசான ரூ.10 ஆயிரத்தை நல்லகுட்டல அள்ளி அணியும், நான்காம் பரிசான ரூ.8 ஆயிரத்தை ரெய்னா கிரிக்கெட் கிளப் அணியும் பெற்றன.

பரிசளிப்பு விழாவின்போது வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை மதி இன்டேன் கேஸ் உரிமையாளர் மதியன்பன், பேரூராட்சி தலைவர் மணி ஆசிரியர் மயில் முருகன், கவுன்சிலர் பச்சையப்பன், ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்குமார், க.மணிமாறன் கியோர் வழங்கினார்கள்.

Tags:    

Similar News