உள்ளூர் செய்திகள்
சாயர்புரம் அருகே மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி
- சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
- காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு சேர்வைக் காரன்மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமை தாங்கி கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.
தூத்துக்குடி மாதாநகர் அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், காமராஜ் நகர் அணிக்கு 2-வது பரிசு ரூ. 8 ஆயிரமும், பண்டாரவிளை அணிக்கு 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்ப ட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் முன்னி லை வகித்தார். காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.