உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற அணியினருக்கு சேர்வைக் காரன்மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி கோப்பையை வழங்கிய காட்சி.

சாயர்புரம் அருகே மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி

Published On 2022-09-22 06:49 GMT   |   Update On 2022-09-22 06:49 GMT
  • சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
  • காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் ‌கலந்து கொண்டனர்.

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து காமராஜ் நகரில் இளைஞர் மன்றத்தினர் நடத்தும் 4-ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற அணியினருக்கு சேர்வைக் காரன்மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமை தாங்கி கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.

தூத்துக்குடி மாதாநகர் அணிக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், காமராஜ் நகர் அணிக்கு 2-வது பரிசு ரூ. 8 ஆயிரமும், பண்டாரவிளை அணிக்கு 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்ப ட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர் முன்னி லை வகித்தார். காமராஜ் நகர் இளைஞர் மன்றத்தினர் ஊர் பொதுமக்கள் அனைவரும் ‌கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News