உள்ளூர் செய்திகள்

மனைவியுடன் தகராறு:புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை

Published On 2023-03-06 09:09 GMT   |   Update On 2023-03-06 09:38 GMT
  • ஜனார்த்தனன் (வயது31),இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்ஆகின்றன.
  • இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது

கடலூர்:

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் புதுக்குலதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது31),இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்ஆகின்றன. இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை இவர்களுக்குள் மீண்டும்சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

அவரை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால்முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையில் முத்தாண்டிகுப்பம் கிழக்கு தெருவில் உள்ள செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில்ஜனார்த்தனன் கைலி துணியால்தூ க்குபோட்டுதற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News