உள்ளூர் செய்திகள்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
- அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் புறநகர் பகுதியான பொன்னகரம் துணைமின்நிலையத்தில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழைக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, காப்பிளியப்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலைய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செற்பொறியாளர் பிரதீஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.