உள்ளூர் செய்திகள்

ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

Published On 2023-08-19 09:57 GMT   |   Update On 2023-08-19 09:57 GMT
  • விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.
  • ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த ஆடுதுறை மாமரத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 5-ந்தேதி காப்பு கட்டுதல், பூச்சொரிதலுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் அம்பாள் காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், அழகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், தீமிதி விழா நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News