உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரி மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-23 10:26 GMT   |   Update On 2023-09-23 10:26 GMT
  • நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது குறித்து என்று ஆலோசிக்கப்பட்டது.

தருமபுரியில் உள்ள அம்பேத்கார் அறக்கட்டளை கட்டிடத்தில் தருமபுரி மைய மாவட்ட செயலாளர் த.கு.பாண்டியன் தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தருமபுரி மைய மாவட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மேலிட தேர்தல் பொருப்பாளர்கள் தகடூர் மா.தமிழ்செல்வன் நற்குமரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வருகிற 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி னார். பின்னர் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்படுவது குறித்து என்று ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் தமிழன்வர், மண்டல துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், மாநில துணை செயலாளர்கள் ராமன், கோட்ட கலைவாணன், சிவஞானம், கப்பல் செந்தில், கிள்ளிவளவன், ஏ.மாது, தனம், மாவட்ட துணைச் செயலாளர் ஆதித்தமிழன், ஒன்றிய செயலாளர்கள் ஆட்டோ கிருஷ்ணன், குமரன், பொன்சுரேஷ், சங்கர், சந்தானமூர்த்தி, மற்றும் நகர பொருப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News