உள்ளூர் செய்திகள்

சிறுவாபுரி முருகன் கோவிலில் 2 மாதத்தில் பக்தர்கள் ரூ.56.76 லட்சம் காணிக்கை

Published On 2023-08-03 19:19 IST   |   Update On 2023-08-03 19:19:00 IST
  • இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.
  • இரண்டு மாதங்களில் 105 கிராம் தங்கத்தை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2 மாதங்களுக்குப் பின்னர் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகை எண்ணப்பட்டது.

இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரிகள் சிறுவாபுரி சோ.செந்தில்குமார், திருநின்றவூர் சரவணன், ஆய்வாளர் கலைவாணன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், ரூ.56 லட்சத்து 76 ஆயிரத்து 634 ரொக்கம், 105 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Similar News