உள்ளூர் செய்திகள்

கல்வராயன் மலைப்பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சாராய ஊரலை அழித்தனர்.

கல்வராயன் மலைப்பகுதியில்5,200 லிட்டர் சாராயஊறல் அழிப்பு

Published On 2023-01-30 08:52 GMT   |   Update On 2023-01-30 08:52 GMT
  • 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்
  • 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சா ராயம் காய்ச்சு பவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடு பவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படிகள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை யில் தனிப்படை காவலர்கள் கல்வராயன் மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்     அப்போது குரும்பா லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்தி ருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர்மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.

இதேபோல் கள்ளக் குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரனே ஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் ஆக மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்     மேலும் குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகி யுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்ற னர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சா ராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்  போலீஸ் சூப்பிரண்டு கல்வராயன் மலைப்பகு திக்கு நேரடியாக வந்து சாராய ஊரல்கலை அழித்த சம்பவம் அப்பகுதி போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குற்றவாளிகள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News