உள்ளூர் செய்திகள்
- குப்பைகள், பாட்டில்களை எடுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார்.
- சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தருமபுரி,
ஓசூர் அட்கோ காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மோரனப்பள்ளி கிராமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்ற ஆண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் குப்பைகள், பாட்டில்களை எடுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோத னை செய்து அவரது உடலை ஓசூர் அட்கோ காவல் நிலைய காவலர் அசோக், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கி ணைப்பாளர் அருணாச்ச லம், முஹம்மத் ஜாபர், தென்றல் ஆகியோர் தருமபுரியில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.