உள்ளூர் செய்திகள்

செங்குறிச்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.

செங்குறிச்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-10-25 08:51 GMT   |   Update On 2023-10-25 08:51 GMT
  • வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையில் பஞ்சாயத்து மன்றம் அருகில் மருத்துவமுகாம் நடைபெற்றது.
  • மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையில் பஞ்சாயத்து மன்றம் அருகில் மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

இதில் வட்டார பூச்சியியல் வல்லுநர்கள் சுப்ரமணி, மகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக கொசுப்பழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமம் முழுவதும் பிளிச்சிங் பவுடர் போடப்பட்டது.

Tags:    

Similar News