உள்ளூர் செய்திகள்

கோவிலை இடித்ததை எதிர்த்து கையில் அகல் விளக்கு ஏந்தி போராட்டம் நடத்திய காட்சி.

பந்தநல்லூர் கோவிலை இடித்ததை எதிர்த்து கையில் அகல் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-03 09:33 GMT   |   Update On 2023-08-03 09:33 GMT
  • ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதை எதிர்த்து அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
  • உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் கடை வீதியில் அமைந்துள்ள சகஜானந்தா சிலை அருகில் சிவன் குலத்தார் அறக்கட்டளை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள காகிதப்பட்டறைஊராட்சியில்பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர்அங்கிருந்த ஆஞ்சநேயர்கோவிலை இடித்து தள்ளியதைஎதிர்த்து சிவன் குலத்தார் அறக்கட்ட ளை நிர்வாகிகள் கையில் அகல் விளக்கு ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில்மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் இள வரசன், சரவணன், மோகன், ஜெயபால் மற்றும்10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News