உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

Published On 2023-07-09 15:11 IST   |   Update On 2023-07-09 15:11:00 IST
  • சந்திரப்பா என்பவரின் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் புள்ளிமான் நேற்று இரவு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.
  • கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மானை கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி காப்பு காட்டில் அதிக அளவில் மான்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் காப்பு காட்டில் இருந்து இரை தேடி வெளியே வந்த 3 வயதுடைய புள்ளிமான் நேற்று இரவு தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தில் சந்திரப்பா என்பவரின் நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தளி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனவர் ஆனந்த், வனகாப்பாளர் கார்த்திக் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மானை கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர். அந்தமானை வனசரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின் தளி காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News