உள்ளூர் செய்திகள்

கோவை தொழிலதிபரை ஏமாற்றி ரூ.28 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது வழக்கு

Published On 2022-09-24 15:10 IST   |   Update On 2022-09-24 15:10:00 IST
  • ரூ.28 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை லீஷா வாங்கியுள்ளார்.
  • மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே உள்ள குட்டூரை சேர்ந்தவர் மணிக்குமார் (எ) முரு கேசன் (வயது 35). இவது மனைவி லீஷா (28). நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவர் கோவையில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். லீஷாவுக்கும் பிரகாசுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவையில் பிரகாஷ் நடத்தி வந்த பியூட்டிபார்லரில் லீஷா வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் தான் தனியாக பியூட்டிபார்லர் வைக்கவேண்டும் என்று கூறி பிரகாஷிடம் இருந்து ரூ.28 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை லீஷா வாங்கியுள்ளார். ஆனால் அவர் பியூட்டி பார்லர் வைக்கவில்லை. மேலும் தனது கணவருடன் கோவையில் இருந்து அவர் தலைமறைவு ஆகிவிட்டார். கணவன்-மனைவி இருவரையும் பிரகாஷ் பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.

இந்நிலையில் லீஷாவும் அவரது கணவரும் குட்டூர் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசில் பிரகாஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் லீஷா மீதும் அவரது கணவர் மணிக்குமார் மீதும் மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News