உள்ளூர் செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்
ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள்- மறு தேதி அறிவிப்பு
- மாண்டஸ் புயல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் தடைப்பட்டன.
- தொழில்நுட்ப கல்வி இயக்கம் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் டிப்ளமோ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை)யும், கடந்த 10-ந் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 31-ந் தேதியும் (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.