உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மகளை காதலிப்பதாக கூறி தாயை மானபங்கம் படுத்திய வாலிபர்

Published On 2022-07-21 08:45 GMT   |   Update On 2022-07-21 08:45 GMT
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மகளை காதலிப்பதாக கூறி தாயை மானபங்கம்படுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடலூர்: 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் மலர் (வயது 42). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மலர் வீட்டுக்கு நேரில் சென்று அவரது மகளை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறினார். பின்னர் மலரை மானபங்கபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மலர் கொடுத்த புகாரின் பேரில் சக்தி ஆகாஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News