உள்ளூர் செய்திகள்

கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-06 10:10 GMT   |   Update On 2022-06-06 10:38 GMT
  • கூடலூரில் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • கிழக்கு ஒன்றியம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது

ஊட்டி:

தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் உதவித் தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது, தொடர்ந்து வழங்க வேண்டும், குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூடலூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி இன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மில்லர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாந்தி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News