உள்ளூர் செய்திகள்

ஈஸ்வரன் கோவில் தெருவில் குட்டை போல் தேங்கி உள்ள கழிவு நீர்.

கடலூர் மஞ்சக்குப்பம் பாதியில் நிறுத்தப்பட்ட வடிகால் வாய்க்கால் பணியால் பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-06-11 07:40 GMT   |   Update On 2023-06-11 07:40 GMT
  • வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
  • நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெரு வில் தனியார் மருத்துவ மனைகள், கல்வி நிறுவ னங்கள், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் மழைக்காலங்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகே வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி யை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதால் தற்போது கழிவுநீர் முழுவதும் சாலை யில் பெருக்கெடுத்து ஓடி குட்டை போல் தேங்கி உள்ளது. பள்ளி வளாகம் எதிரில் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் வருகிற 14-ந்தேதி பள்ளி கள் திறக்க உள்ள நிலை யில் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இது மட்டும் இன்றி சாலை வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதி அடைந்து வருவதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுநீர் மீது செல்வதால் பொதுமக்கள் மீது கழிவுநீர் தெளித்து துர்நாற்றம் வீசுவதோடு உடல் அரிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

ஆகையால் கடலூர் மாந கராட்சி நிர்வாகம் பாதி யில் நிறுத்தப்பட்ட வடி கால் வாய்க்கால் பணி களை உடனடியாக கட்டி நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதி முழு வதும் தண்ணீர்சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத் தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகை யால் இதனை உடனடியாக கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News