உள்ளூர் செய்திகள்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தீயணைப்புத்துறை சார்பில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

கடலூரில் தீயணைப்புத் துறை: மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு

Published On 2022-07-05 09:35 GMT   |   Update On 2022-07-05 09:35 GMT
  • விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்:

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தீயணைப்பு துறை சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 36 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்வு செய்யபட்டனர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், நிலைய அலுவலர் விஜயகுமார், மற்றும் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News