2 குழந்தைகளை கொன்று தம்பதியினர் தற்கொலைக்கு முயற்சி:தந்தை மீது கொலை வழக்கு
- கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
- விஷம் இருப்பது தெரியவே மனைவி வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரது மகன் கடலரசு. இவருக்கு தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி திவான் ராஜ் என்ற மகனும் நிவன்திக்கா என்ற மகளும் உள்ளனர். இதில் திவான் ராஜ் தட்டக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் ஜனனிக்கும்-கடலரசுக்கும் இடையே குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவ–ருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஜனனி கனவனுடன் சண்டை யிட்டுக்கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவர் குடும்ப த்தாரும் பேச்சு வார்த்தை நடத்தி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என்.தட்டக்கல் கிராமத்தில் ஜனனி அவரது கணவருடன் வசித்து வந்தது நிலையில். நேற்று கடலரசு தனது குடும்பத்துடன் அதே பகுதியில் உள்ள பெரிய–மலை தீர்த்தம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அங்கு கடலரசு தான் மறைத்து வைத்துத்த விஷத்தை தனது குழந்தை–களுக்கு கொடுத்து விட்டு மனைவிக்கு கொடுக்கும் போது விஷம் இருப்பது தெரியவே மனைவி வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
தப்பி ஓடி வந்த மனைவி பெரியமலை அடிவாரத்தில் உள்ளவ ர்களிடம் கூறவே அவர்கள் ஓடி சென்று பார்த்தபோது குழந்தைகள் மயங்கி நிலையில் காணப் பட்டனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் கணவன்-மனைவி இருவருரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் கடலரசுவும், ஜனனிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாகரசம் பட்டி போலீசார் நேரில் சென்று குழந்தைகள் உடலை கைப்பற்றி கிருஷ்ண–கிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற கடலரசு மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவி–னர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி–யுள்ளது.