உள்ளூர் செய்திகள்

சீர்காழியில் கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கூட்டம்

Published On 2023-02-11 07:40 GMT   |   Update On 2023-02-11 07:40 GMT
  • 17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.
  • திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

சீர்காழி,:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது.ஒன்றிய க்குழு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் ஒன்றிய குழு துணை தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இளநிலை உதவியாளர் சரவணன் மன்ற தீர்மான ங்களை வாசித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு: கவுன்சிலர் ரிமா பேசுகையில் சீர்காழி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகளில்17 ஊராட்சிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றார்.

கவுன்சிலர் விஜயகுமார் பேசுகையில் திட்டை செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது.

இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் தென்னரசு பேசுகையில் எடக்குடி வட பாதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க முயற்சி எடுத்த ஒன்றிய குழு தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

ஒன்றிய குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் பேசுகையில் தமிழக முதல்-அமைச்சர் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

முடிவில் மேலாளர் சுலோசனா நன்றி கூறினார்.

Tags:    

Similar News