- பருத்தி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் விலையை அதிகப்படுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதால் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான்பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக வல ங்கைமான், பாடகச்சேரி, சித்தன்வாழூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியில் உள்ள விவசாயி களின் பருத்தி ஏலம் விடப்படுகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ பருத்தி 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று ஒரு கிலோ 60 ரூபாய்க்கு மட்டும் விலை போவதால் .விலையை அதிகப்ப டுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது தாங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதாகவும், மனைவியின் நகைகளை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபடுவ தாகவும், உடனடியாக தமிழக அரசு இவ்விஷயத்தில் தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து வலங்கைமான் காவல்துறை இன்ஸ்பெக்டர் விஜயா நேரில் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளை கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினார்.. தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வந்த விவசாயிகளிடத்தில் வருவாய் ஆய்வாளர் சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போரா ட்டத்தை ஒத்தி வைத்தனர். இதையடுத்து இன்று காலை மீண்டும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடந்த இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.