உள்ளூர் செய்திகள்

மெஞ்ஞானபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய காட்சி.

மெஞ்ஞானபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-06-30 09:26 GMT   |   Update On 2022-06-30 09:26 GMT
  • முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மாணவர்களுக்கு போடப்பட்டது.
  • பள்ளி பெற்றோர்ஆசிரிய கழக தலைவரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர்:

மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. பள்ளி பெற்றோர்ஆசிரிய கழக தலைவரும், யூனியன் சேர்மனுமான பாலசிங் முகாமை தொடங்கி வைத்தார். இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மாணவர்களுக்கு போடப்பட்டது.

முகாமில் பள்ளித்தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன், சுகாதாரஆய்வாளர்கள் சேதுபதி, ராஜ்குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News