உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 7 பேருக்கு கொரோனா

Published On 2022-11-09 15:16 IST   |   Update On 2022-11-09 15:16:00 IST
  • கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
  • நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நேற்று முன்தினம் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 7 பேருக்கு தொற்று இருந்தது கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சி பகுதியில் ஒருவர், தருமபுரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 1.31 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.30 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags:    

Similar News