உள்ளூர் செய்திகள்

கடலூரில் சுய உதவிக்குழுக்களின் விற்பனை மேம்படுத்த ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் தகவல்

Published On 2023-07-22 12:55 IST   |   Update On 2023-07-22 12:55:00 IST
  • ”வாங்குவேர் விற்பனையாளர்” ஒருங்கி ணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும்.
  • தனிநபர் தொழில் முனைவோர்க ளாகவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர் களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியி ட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுய உதவிக்குழுக்களில் உற்பத்தி பொருட்களின் விற்பனையை மேம்படுத்து வதற்கும், சந்தைபடு த்திடவும், "வாங்குவேர் விற்பனையாளர்" ஒருங்கி ணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும். வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், சுய உதவிக்குழுவின் தனிப்பட்ட உற்பத்தியாளராகவும் இருக்கலாம் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர்க ளாகவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர் களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.

விற்பனையாளர்கள் தங்கள் பெயர், உற்பத்தி பொருட்களின் விபரம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை வாங்குபவர்களும் (வர்த்த கர்கள்) மாவட்டத்திலுள்ள மேலாண்மை அலகு, மகளிர் திட்ட அலுவலகத்தில் வருகிற 24.07.2023-க்குள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News