உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதலியை பங்குபோடுவதில் தகராறு: ஆட்டோ டிரைவரை கொன்ற 3 பேர் கைது

Published On 2023-01-30 13:49 IST   |   Update On 2023-01-30 13:49:00 IST
  • சக்திவேல் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.
  • சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்தார் பூமிகா.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் ஆட்டோ டிரைவர். திருமணமான இவர், தட்டாஞ்சாவடி காளிகோ வில் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராம் காதலிபூமிகா என்பவரை பங்கு போட்டு கொள்வதில்ஆட்டோ டிரைவர்கள் சக்திவேல்சுமன்ஆகியஇருவருக்கும்இடையே மோதல்இருந்து வந்தது.சுமன் சக்திவேலை கொலை செய்ய சதி திட்டம்தீட்டி, சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் உதவியுடன் சக்திவேலை காளிகோவில் சுடுகாட்டுக்கு மதுபானம் அருந்த அழைத்து சென்று தீர்த்துக்கட்டியுள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாகபண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுசபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்குப்பதிந்து சுமன், வசந்தகுமார், குணா ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்த பூமிகா தனது வீட்டை விட்டு வெளியேறிஓடும் பஸ்ஸில் விஷம் குடித்து மயங்கி ய நிலையில் உயிரிழந்தார். இந்த வழக்கில்தலை மறைவாக இருந்த 3 பேரை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இன்று காலை களத்துமேடு மகேஷ்,மணிகண்டன், கொக்கு பாளையம்அஜீத் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

Tags:    

Similar News