உள்ளூர் செய்திகள்

உடுமலையில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Published On 2023-01-03 04:58 GMT   |   Update On 2023-01-03 04:58 GMT
  • போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
  • நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர்.

உடுமலை : 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில் கட்டுப்பாட்டு அறையினை உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல் திறந்து வைத்தார். இதில் போக்குவரத்து ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கு உதவி புரிந்த சன் பீவல்ஸ்- சன் மோட்டார்ஸ் நிறுவன உரிமையாளர் கௌதம், சுகுணா நிறுவனத்தின் பொது மேலாளர் அருள் ஆனந்த் கிருஷ்ணன், மற்றும் எஸ் .எம். டிராவல்ஸ் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்குவித்தனர்.

Tags:    

Similar News