உள்ளூர் செய்திகள்

தொடர் மழை- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 வீடுகள் சேதம்

Published On 2022-12-12 08:58 GMT   |   Update On 2022-12-12 08:58 GMT
  • மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது.
  • நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

காஞ்சிபுரம்:

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து.

மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 25 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இதேபோல் 21 கால்நடைகள் இறந்து இருக்கிறது.

மேலும் 2,668 கோழி மற்றும் வளர்ப்பு பறவைகள் இறந்துள்ளன. நிவாரண முகாமில் மொத்தம் 30 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News