உள்ளூர் செய்திகள்

குடிப்பழக்கம் காரணமாக விஷம் குடித்த சலூன்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு

Published On 2022-11-04 15:52 IST   |   Update On 2022-11-04 15:52:00 IST
  • விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள தொட்டூர் பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன்(வயது 43).கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் முனிகிருஷ்ணனின் வியாதி சரியாகவில்லை.

இதில் மனமுடைந்த அவர் கடந்த 28-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.மயங்கி கிடந்த

அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்,அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து முனி கிருஷ்ணனின் மனைவி காந்தம்மாள் தந்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தலைவராம் பகுதியை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் திருமலேஷ் (43) என்பவரும் குடிப்பழக்கத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News