உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் கூட்டத்தில் தலைவர் பேசிய போது எடுத்த படம்.

வேடசந்தூரில் நுகர்வோர் பொதுக்குழு கூட்டம்

Published On 2022-06-27 07:26 GMT   |   Update On 2022-06-27 07:26 GMT
  • வேடசந்தூரில் வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேடசந்தூர்:

வேடசந்தூர் –வட்டார நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மற்றும் நலச்சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சங்க கவுரவத் தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. தலைவர் தில்லை சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

செயலாளர் பூவை நேருமாணிக்கம் வரவே–ற்புரை நிகழ்த்தி சங்க செயல்பாடுகளை எடுத்து–ரைத்தார். இக்கூட்டத்தில் வேடசந்தூர் - சென்னை விரைவு பஸ் முன்புபோல் முறையாக வேடசந்தூரில் இருந்து இயக்க வேண்டும்.

வடமதுரை - கோயம்புத்தூர் பஸ் காலையும் மாலை–யும் தொடக்கத்தில் இயக்கியதைப் போல் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அழகாபுரி அணை ஷட்டர் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் பரசு–ராமன், பொம்முசாமி, சவுந்திரராஜன், முருகன், பாலாஜி, மகேஸ்வரன், சிவக்குமார் உட்பட. உறுப்பினர்கள் கலந்து–கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வெக்காளி முருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News