- நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.
- ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பனகல் கட்டிடம் வளாகத்தில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நுகர்வோர் நீதிமன்றத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள புதிய கோர்ட் வளாகத்தில் நுகர்வோர் நீதிமன்றம் கட்டும் பணிகள் நடந்து முடிவடைந்தது.
இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ஓய்வு பெற்ற நீதிபதியும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவருமான சுப்பையா நுகர்வோர் நீதிமன்றத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தலைவர் மோகன்தாஸ், முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் மற்றும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.