உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசிய போது எடுத்த படம். அருகில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் பலர் உள்ளனர்.

மாங்கனி கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-01 14:45 IST   |   Update On 2023-07-01 14:45:00 IST
  • மாங்கனி கண்காட்சி விழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
  • இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வருகிற 5-ந் தேதி 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாங்கனி கண்காட்சி விழாவையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News