உள்ளூர் செய்திகள்

கல்குவாரி உரிமம் வழங்க கருத்து கேட்பு கூட்டம்

Published On 2023-02-10 09:23 GMT   |   Update On 2023-02-10 09:23 GMT
  • கோகலை கிராமத்தில் கல்குவாரி உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
  • மேலும், கல்குவாரிகளுக்கான தேவை மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குவாரிகள் நடத்த வலியுறுத்தியும் பேசினர்.

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அக்கலாம்பட்டி கோகலை கிராமத்தில் கல்குவாரி உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் திருச்செங்கோடு வட்டம் அக்கலாம்பட்டி கோக்கலை கிராமத்தில் கல்குவாரி உரிமம் வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், கல்குவாரிகளுக்கான தேவை மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குவாரிகள் நடத்த வலியுறுத்தியும் பேசினர்.

இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News