உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

Published On 2022-09-24 10:16 GMT   |   Update On 2022-09-24 10:16 GMT
  • தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
  • வர்த்தக சங்க நிர்வாகிகள் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி:

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் குப்பை மேலாண்மை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் மாடுகளை கட்ப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமை வகித்தார்.

நகராட்சி ஆணையர் ராஜகோபாலன், மேலாளர் காதர் கான், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் முன்னிலை வகித்தனர். கணக்கர் ராஜ கணேஷ் வரவேற்றார்

சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் வர்த்தக சங்க செயலாளர் துரைராஜ் பொருளாளர் ஹரக்சந்த் நிர்வாகிகள் புக்ராஜ் ராஜ்குமார் சந்துரு வினோத் ஜெர்ரிஅகஸ்டின்தாஸ் முரளி மற்றும் சீர்காழி தாலுக்கா மொபைல் விற்ப்பனையாளர்கள் மற்றும் பழுது நீக்குவோர் சங்க தலைவர் மார்க்ஸ்பிரியன் மற்றும் வர்த்தகசங்க நிர்வாகிகள்கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News