உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்த காட்சி.

ரூ.30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி

Published On 2023-10-22 09:56 GMT   |   Update On 2023-10-22 09:56 GMT
  • கடத்தூர்-பொம்மிடி சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது.
  • நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு.

தருமபுரி மாவட்டம், கடத்தூர்-பொம்மிடி சாலையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணிகள் செய்து வருகின்றனர். அப்போது இச்சாலை இருபுறங்களிலும் வாக னங்களின் கூட்டத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதயைடுத்து ஆக்கிர மைப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தருமபுரி கடத்தூர் சாலையில் புதிய தார்ரோடு அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

இதில் பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தரமாக வேலைகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெடுஞ்சாலை துறையினர் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News