உள்ளூர் செய்திகள்

பள்ளி வகுப்பறை கட்டிட பணியை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமருகல் பகுதிகளில் 4 புதிய அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம்

Published On 2023-11-09 09:26 GMT   |   Update On 2023-11-09 09:26 GMT
  • புதிய 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
  • கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல், கட்டு மாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து மேலப்போலகம், வவ்வாலடி பகுதிகளிலும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 2 வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பால முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News