உள்ளூர் செய்திகள்

நேரு உருவப்படத்திற்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினர். அருகில் சேர்மன் வள்ளி முருகன் உள்ளார்.

சுரண்டையில் காங்கிரஸ் சார்பில் நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Published On 2023-11-16 14:35 IST   |   Update On 2023-11-16 14:35:00 IST
  • சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
  • விழாவில் பழனி நாடார் எம்எ.ல்.ஏ. மற்றும் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சுரண்டை:

சுரண்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பழனி நாடார் எம்எ.ல்.ஏ. மற்றும் சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட நேருவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினர்.

விழாவில் கவுன்சிலர் அமுதா சந்திரன், அண்ணாத்துரை, நாட்டான்மை ராம்ராஜ், அருணாசலம், பிரபாகரன், கஸ்பா செல்வம், துரை, கந்தையா, பாலகனேஷ் சங்கர், சவுந்தர், ஆனந்த், செல்வராஜ், அரவிந்த், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News