உள்ளூர் செய்திகள்

மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல்; ஒருவர் கைது

Published On 2023-07-01 09:32 GMT   |   Update On 2023-07-01 09:32 GMT
  • 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  • தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் - இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர்.

2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் மாட்டு வண்டி ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் ( வயது -38) என்பவரை கைது செய்தனர்.தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்

Tags:    

Similar News