உள்ளூர் செய்திகள்

கோப்பை வென்ற மயிலாடுதுறை அணியுடன் கைபந்து சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

வாலிபால் போட்டியில் கோப்பை வென்ற அணிக்கு பாராட்டு

Published On 2022-07-16 10:04 GMT   |   Update On 2022-07-16 10:04 GMT
  • சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
  • போட்டி–யில் கலந்து கொண்ட மயிலாடுதுறை வாலிபால் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

சீர்காழி:

தமிழ்நாடு ஸ்டேட் வாலிபால் அசோசியேஷன் நடத்திய கிழக்கு மண்டலங்களுக்கான சீனியர் ஸ்டேட் சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் பங்கேற்று விளையாடினர்.

மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டு முதல்முறையாக போட்டி–யில் கலந்து கொண்ட வாலிபால் விளையாட்டு வீரர்கள் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற அணியினரை மயிலாடுதுறை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், செயலாளர் எஸ்.பாபு, பொருளாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் பொன்செந்தில், எடின்.ராகுல், ரவீந்திரபாரதி, வாஞ்சிநாதன், சரவணன், வளவன், பழனிவேல், முரளிதரன், பாரி, அணிமேலாளர் சுகுமார் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாட மயிலாடுதுறை அணி தேர்வாகியுள்ளது.

Tags:    

Similar News