உள்ளூர் செய்திகள்
கேத்தி பேருராட்சியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
- கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கபட்டது.
- 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது.
ஊட்டி,
கேத்தி பேருராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். கேத்தி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்(மஞ்சள், குங்குமம், வளையல், மங்கல பொருட்கள் தட்டு, ரவிக்கை) வழங்கபட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்பட்டு 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது. இதில் பேருராட்சி உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.