உள்ளூர் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-06 09:46 GMT   |   Update On 2023-07-06 09:46 GMT
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • திருமருகல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் வட்டார தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம்,திட்டச்சேரி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர் உடன் செயல்பட வேண்டும், திருமருகல் ஒன்றிய பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News