உள்ளூர் செய்திகள்

போட்டிகயில் கலந்துகொண்ட மாணவர்கள்.

பள்ளியில் வண்ண புத்தக தினம்

Published On 2023-08-03 09:50 GMT   |   Update On 2023-08-03 09:50 GMT
  • சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் வண்ண புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
  • மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்தஅண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் போன் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் நினைவு தினம்,தேசிய வண்ண புத்தகங்கள் தினம், இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்களி வெங்கையா பிறந்தநாள் ,தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகள் பிறந்தநாள் தினவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் இரவீந்திரன், ஆசிரியர்கள் சந்திரசேகரன்,சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி,ஆனந்தன் பள்ளி மேலாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆசிரியர்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாணவ -மாணவிகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News