உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்- போலீசார் விசாரணை

Published On 2023-04-11 07:51 GMT   |   Update On 2023-04-11 07:51 GMT
  • பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த இளம்பெண் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
  • மாணவியின் பெற்றோர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கல்லூரி சென்ற அவர் திரும்பி வரவில்லை. தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவருகிறார்கள்.

Tags:    

Similar News