உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-06-09 12:57 IST   |   Update On 2023-06-09 12:57:00 IST
  • ராஜஸ்ரீ கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார்.
  • அருள் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

கடலூர்:

பண்ருட்டி அருகே செம்மேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 18) கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ.படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று 7-ம்தேதி பண்ருட்டியில் உள்ள டைப்ரைட்டிங் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்ரீயின் பெற்றோர் இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் ராஜஸ்ரீ கிடைக்க வில்லை. இதுகுறித்து ராஜஸ்ரீயின் தந்தை ராமமூர்த்தி காடாம்புலியூர் போலீசில் மணப்பாக்கத்தை சேர்ந்த அருள் என்பவர் தனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் கொடு த்தார். புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அருளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News