உள்ளூர் செய்திகள்

விபத்தில் கல்லூரி மாணவர் பலி

Published On 2023-03-11 15:46 IST   |   Update On 2023-03-11 15:46:00 IST
  • திருத்துறைப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
  • தனது நண்பருடன் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

ஞ்சையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் காளிதாஸ்(வயது19). இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி முதல் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று தண்டைலச்சேரி பகுதியில் இருந்து காளிதாஸ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றனா்.

அப்போது வேலூர்பாலம் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் காளிதாஸ் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மாணவர் விஜய் படு்காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News