உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-03 08:53 GMT   |   Update On 2022-11-03 08:53 GMT
  • செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் புன்னைவனம் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
  • சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நெல்லை:

செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் புன்னைவனம்(வயது 22). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News