உள்ளூர் செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நவீன செயலிகளுடன் கூடிய கைப்பேசியை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயலிகளுடன் கைப்பேசி கலெக்டர் வழங்கினார்

Published On 2023-02-21 05:08 GMT   |   Update On 2023-02-21 05:08 GMT
  • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
  • 10 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.1,35,490 மதிப்பிலான நவீன செயலிகளுடன் கூடிய கைபேசிகளை வழங்கினார்.

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்று த்திறனாளிகள் உதவி த்தொகை, மாற்றுத்திற னாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்வி க்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் மற்றும் காவல்துறை தொடர்பான மனுக்கள் என 273 பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

மேலும், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது எந்தவித காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.1,35,490 மதிப்பிலான நவீன செயலிகளுடன் கூடிய கைபேசிகளையும், ஆணை மலையான் பட்டியில் வசித்து வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News