உள்ளூர் செய்திகள்

412 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

Published On 2023-08-29 14:47 IST   |   Update On 2023-08-29 14:47:00 IST
  • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது
  • முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 412 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா உத்தரவிட்டார்கள். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில்பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர் களுக்கு எலக்ட்ராணிக் முறையில் பிரெய்லி எழுத்துக்களில் படிப்பதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பிரெய்லி ரீடர் கருவியினை 4 நபர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம்ரூ.1.40 இலட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா வழங்கினார். இக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்அமீர் பாஷா மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும்அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News