உள்ளூர் செய்திகள்

கொட்டும் மழையில் குடைபிடித்தபடி ஆய்வு செய்யும் கலெக்டர் லலிதா.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கொட்டும் மழையில் கலெக்டர் லலிதா ஆய்வு

Published On 2022-11-12 08:11 GMT   |   Update On 2022-11-12 08:11 GMT
  • பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
  • பம்புசெட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வருவதால் மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கேசவன்பாளையம், களுவன்திட்டு, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 13 -வது வார்டு, ஸ்டேட் வங்கி அருகில் தேர் வடக்கு வீதி, 8-வது வார்டு தடாளம் மேற்கு , வசந்த் நகர், 2- வது வார்டு இரணியன் நகர் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் லலிதா கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கேசவன்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் மழை நீரை பம்பு செட் வைத்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்டார். அங்குள்ள பொது மக்களிடம் மழை அதிகமாக இருக்கும் என்று வானிலை அறிக்கை கூறியுள்ளதால் பொது மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட களுவன்திட்டு பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

குறிப்பாக பொது மக்கள் தங்கியிருக்கும் வீடுகளின் அருகில் மழை நீர் தேங்கியிருக்கும் பட்சத்தில் பம்பு செட் வைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மழை நீரை வெளியேற்ற வேண்டும்.

மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் பம்பு செட்வைத்து மழை நீரை வெளியேற்ற சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது , சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, சீர்காழி நகர் மன்றத்த லைவர்துர்கா பரமே ஸ்வரி, தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணாசங்கரி, சீர்காழி நகராட்சி ஆணையர்வா சுதேவன், தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர்கமலக்கண்ணன், வட்டாட்சியர்கள் செந்தில்குமார்,புனிதா,வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரதுறை , வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு அரசுத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News